செய்திகள்
தூத்துக்குடி விமான நிலையம்

திருவனந்தபுரம், தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடல்

Published On 2020-12-03 16:41 GMT   |   Update On 2020-12-03 16:41 GMT
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், தூத்துக்குடி விமான நிலையம் புரெவி புயல் காரணமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இருந்தாலும் காற்றுடன் மழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தூத்துக்குடிக்கும்- பாம்பனுக்கும் இடையில் கடந்து, அதன்பின் கன்னியாகுமரி இடையே காற்றழுத்தத் தாழ்வாக செல்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், நாளை காலை 10 மணி முதல்  மாலை 6 மணி மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News