செய்திகள்
கணினி பயிற்சி

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி

Published On 2021-09-09 05:01 GMT   |   Update On 2021-09-09 05:01 GMT
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற கணினி பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி பார்வையிட்டார்.
விருதுநகர்:

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பாக அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் கடந்த 3 வார காலமாக உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தங்கள் அருகாமையில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் கணினி பயிற்சி கடந்த 6-ந் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற கணினி பயிற்சியினை விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி பார்வையிட்டார். இந்த பயிற்சி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
Tags:    

Similar News