செய்திகள்
தற்கொலை

கொள்ளிடத்தில் பழக்கடை வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-04-13 16:45 GMT   |   Update On 2021-04-13 16:45 GMT
கொள்ளிடத்தில் குடும்ப பிரச்சினையால் பழக்கடை வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பிரேம்குமார்(வயது41).இவர் கொள்ளிடம் ரெயில்வே ரோட்டில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த இவர் நேற்று இரவு வீட்டிற்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பிரேம்குமார் மனைவி மனோரஞ்சனி (35) கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பிரேம்குமார் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News