செய்திகள்
மழை

நிவர் புயல்- சென்னையில் 7 செ.மீ. மழை பதிவு

Published On 2020-11-24 02:06 GMT   |   Update On 2020-11-24 02:06 GMT
நிவர் புயல் காரணமாக சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

புயல் சின்னத்தால் அதிகாலை 5.30 மணி நிலவரப்படி மேற்கு தாம்பரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சென்னை அசோக் நகரில் கனமழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

40 அடி உயர மரத்தை உடனே மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News