செய்திகள்
நிவர் புயல்- சென்னையில் 7 செ.மீ. மழை பதிவு
நிவர் புயல் காரணமாக சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
புயல் சின்னத்தால் அதிகாலை 5.30 மணி நிலவரப்படி மேற்கு தாம்பரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை அசோக் நகரில் கனமழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
40 அடி உயர மரத்தை உடனே மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
புயல் சின்னத்தால் அதிகாலை 5.30 மணி நிலவரப்படி மேற்கு தாம்பரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை அசோக் நகரில் கனமழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
40 அடி உயர மரத்தை உடனே மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.