செய்திகள்
பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்

142வது பிறந்த நாள்- பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

Published On 2020-09-17 05:28 GMT   |   Update On 2020-09-17 05:28 GMT
பெரியாரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை:

தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபின்னர், அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பெரியார் உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

Similar News