செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் விவசாயி தற்கொலை
தேன்கனிக்கோட்டையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தேர்பேட்டையை சேர்ந்தவர் எல்லேஸ் (வயது 38). விவசாயி. இவர் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி எல்லேஸ் இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி நர்சம்மா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.