உள்ளூர் செய்திகள்
அரசு மருத்துவமனை டாக்டர் இசக்கி மரக்கன்றுகளை நாட்டினார்.

மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-04-17 07:34 GMT   |   Update On 2022-04-17 07:34 GMT
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிவகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
சிவகிரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிவகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை டாக்டர் இசக்கி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஏ.ஐ.டி.யு.சி. வேல்முருகன், மாதர் சங்க சண்முக வடிவு, கவுன்சிலர் அருணாசலம், நிர்வாக குழு ராஜகோபால், மாடசாமி, குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News