செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது
கோவை அருகே கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் தீப்சந்த் பட்டேல் (வயது 24). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வைசியாள்வீதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 2 சிறுவர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தீப்சந்த்பட்டேலின் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவர்களை மடக்கி பிடித்து பெரியகடைவீதி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.