உள்ளூர் செய்திகள்
தென்காசியில் 100 மதுபாட்டில்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் ஆய்குடி அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 100 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாங்காடு கருப்பாநதி ஆற்றுப்பாலம் அருகில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு முட்புதருக்குள் விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.