ஆன்மிகம்
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் வந்தி அம்மனுக்கு பிட்டுத்திருவிழா
சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் வந்தி அம்மனுக்கு பிட்டுத்திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் வந்தி அம்மனுக்கு பிட்டுத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி வந்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் அரிசி, நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய், சுக்கு ஆகியவை கலந்த பிட்டு, அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பிட்டுத்திருவிழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும் அரிசி, நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய், சுக்கு ஆகியவை கலந்த பிட்டு, அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பிட்டுத்திருவிழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.