செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி லாரி டிரைவர் பலி

Published On 2019-11-12 13:15 GMT   |   Update On 2019-11-12 13:15 GMT
தருமபுரி அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார்.
தருமபுரி:

தருமபுரியை அடுத்துள்ள துவக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது43). லாரி டிரைவரான இவரது மனைவி கனகவள்ளி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு தீர்த்தகிரி தனது லாரியை டாஸ்மாக் குடோனில் நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது தருமபுரி கலெக்டர் பங்களா பின்புறம் பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தீர்த்தகிரி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான தீர்த்தகிரி உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News