செய்திகள்
விபத்து

ஒட்டப்பிடாரம் அருகே ஜே.சி.பி. எந்திரம் மோதி மாணவன் பலி

Published On 2020-02-06 08:13 GMT   |   Update On 2020-02-06 08:13 GMT
ஒட்டப்பிடாரம் அருகே ஜே.சி.பி. எந்திரம் மோதி பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒட்டப்பிடாரம்:

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் மேலமடம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் அதிபன் (வயது 17). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவனது நண்பர்களான குலசேகரநல்லூரை சேர்ந்த முத்து(17), கிருஷ்ணன் (17) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு புதியம்புத்தூரில் இருந்து குலசேகரநல்லூருக்கு சென்றுள்ளான்.

அப்போது அவர்கள் ஒசனூத்து அருகே செல்லும்போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளனர். இதில் ஜே.சி.பி. எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அதிபன் பலியானான். மேலும் அவனது நண்பர்கள் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து ஒட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தில் பலியான அதிபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News