லைஃப்ஸ்டைல்
பூண்டு சீரகக் குழம்பு

ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சீரகக் குழம்பு

Published On 2020-01-29 08:10 GMT   |   Update On 2020-01-29 08:10 GMT
சீரகம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. இன்று சீரகத்தை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு -  15 பல்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை



செய்முறை:

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.

புளியை ஒரு கப் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள்.

வெங்காயம் சற்று வதங்கியதும் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.

பச்சை வாசனை போனதும் பொடித்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.

ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.

சூப்பரான பூண்டு சீரகக் குழம்பு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News