செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 55 பேர் பாதிப்பு

Published On 2021-10-10 10:05 GMT   |   Update On 2021-10-10 10:05 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 309 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 818 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,829 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News