லைஃப்ஸ்டைல்
வலியில்லாத இன்சுலின் ஊசிகள்

வலியில்லாத இன்சுலின் ஊசிகள்

Published On 2021-08-13 07:32 GMT   |   Update On 2021-08-13 08:55 GMT
டாக்டர்களின் அறிவுரைகளை கடைபிடிக்காதவர்களும், அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பவர்களும் உடலுக்கு, போதிய உழைப்பை அளிக்காதவர்களும் நீரிழிவு நோயை முற்றவைக்கிறார்கள்.
நீரிழிவு நோய் ஆயுளை குறைத்துவிடும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல.

தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி ஆரோக்கியமான உணவுகளை உண்பது, சர்க்கரை சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது என சிலவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர முடியும். மேலும் பரிசோதனைகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவதும் அவசியம்.

டாக்டர்களின் அறிவுரைகளை கடைபிடிக்காதவர்களும், அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பவர்களும் உடலுக்கு, போதிய உழைப்பை அளிக்காதவர்களும் நீரிழிவு நோயை முற்றவைக்கிறார்கள். நீரிழிவு பிரச்சினை அதிகரிக்கும்போது கண்கள், சிறுநீரகங்கள், கால்கள், இதயமும்கூட பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

நீரிழிவை கட்டுப்படுத்த முடியாமல் முற்றவிடுபவர்களுக்கு மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இம்மாதிரியான சூழலில் அதை கட்டுக்குள் கொண்டுவர இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளலாம். இப்போது வலியில்லாத இன்சுலின் ஊசிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. வலியில்லாத அந்த ஊசிகள் ‘இன்சுலின் பம்ப்’ என அழைக்கப்படுகின்றன.
Tags:    

Similar News