செய்திகள்
தற்கொலை

திருக்கோவிலூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-06-06 15:15 GMT   |   Update On 2021-06-06 15:15 GMT
திருக்கோவிலூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி மகாலட்சுமி(வயது 29). சம்பவத்தன்று வீ்ட்டில் தனியாக இருந்த இவர் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து மகாலட்சுமியை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மகாட்சுமியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இது குறித்து அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News