செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 306 பேர் பாதிப்பு

Published On 2021-06-16 13:02 GMT   |   Update On 2021-06-16 13:02 GMT
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,629 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 14 பேர் இறந்துள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 306 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 673 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 67 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,629 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 14 பேர் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News