செய்திகள்
முதல்வரின் பாதுகாவலர், போலீசார் இடையே ஏற்பட்ட மோதல்

முதல் மந்திரியின் பாதுகாவலருடன் போலீசார் மோதல்

Published On 2021-06-25 07:28 GMT   |   Update On 2021-06-25 07:28 GMT
இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், நிதின் கட்கரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சிம்லா:

இமாச்சலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

முன்னதாக வாகன அணிவகுப்பின்போது பாதுகாப்பில் இருந்த மாவட்ட போலீசாருக்கும், முதல்வரின் பாதுகாவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக மாறியது. அப்போது குல்லு போலீஸ் சூப்பிரண்டு, முதல்-மந்திரியின் பாதுகாவலரை அறைந்ததாக கூறப்படுகிறது. 

“இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில டி.ஜி.பி. 3 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் நிருபர்களிடம் கூறினார்.
Tags:    

Similar News