தொழில்நுட்பம்
பேஸ்புக்

ஆயிரக்கணக்கான அக்கவுண்ட்களை அதிரடியாக நீக்கிய பேஸ்புக் - காரணம் இது தான்

Published On 2020-11-07 05:04 GMT   |   Update On 2020-11-07 05:04 GMT
பேஸ்புக் நிறுவனம் சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான அக்கவுண்ட்களை இந்த காரணத்திற்காக அதிரடியாக நீக்கி இருக்கிறது.


பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுக்க 1196 அக்கவுண்ட்கள், 994 தீங்கு விளைவிக்கும் அக்கவுண்ட்ளை இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து நீக்கி உள்ளது. இதுதவிர 7947 பக்கங்கள், 110 குரூப்கள் ஒருங்கிணைந்து விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட காரணத்துக்காக நீக்கி இருக்கிறது.

அக்டோபர் மாதத்தில் பேஸ்புக் 14 நெட்வொர்க்குகளை சேர்ந்த அக்கவுண்ட்கள், பக்கங்கள் மற்றும் குரூப்களை அதிரடியாக நீக்கியது. இதில் எட்டு நெட்வொர்க்குகள் ஜார்ஜியா, மியான்மர், உக்ரைன் மற்றும் அசர்பைஜான் நாடுகளை சேர்ந்தவை ஆகும். 



இவை அந்தந்த நாடுகளில் உள்ள பயனர்களை குறிவைத்து தவறான தகவல்களை பரப்புவது, விதிகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. மற்ற ஆறு நெட்வொர்க்குகள் ஈரான், எகிப்து, அமெரிக்கா, மெக்சிகோ சார்ந்து செயல்பட்டு வந்தன.
Tags:    

Similar News