உள்ளூர் செய்திகள்
இலவச மின்சார ஆனை வழங்கிய சேர்மன்.

நெமிலி அருகே இலவச புதிய மின் இணைப்புகள்

Published On 2022-04-17 09:22 GMT   |   Update On 2022-04-17 09:22 GMT
நெமிலி அருகே இலவச புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.
நெமிலி:

தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் ஒராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் கலந்துரையாடல் நடத்தினார். அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜ், அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி, அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தரராஜன், நகர செயலாளர் வி.எல்.ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு அரக்கோணம் மின் கோட்டத்தில் இருந்து 465 விவசாயிகளுக்கான இலவச புதிய மின் இணைப்புக்கான ஆணையினை வழங்கினர். 

அப்போது அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், அரக்கோணம் மின் கோட்ட செயற் பொறியாளர் கண்ணன் உதவி செயற்பொறியாளர் புனிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News