செய்திகள்
மருத்துவ முகாம்

கோகூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2021-02-22 04:39 GMT   |   Update On 2021-02-22 04:39 GMT
கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோகூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரபு தலைமையில் டாக்டர்கள் முருகேஷ் குமார், பிரபு, கயல்விழி, விக்னேஷ், தீபிகா, ஜனனி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் பொது மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம் போன்றவை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் வடகரை, கோகூர், ஆணைமங்கலம், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 693 பேர் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்றனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி உறுப்பினர்கள். சுகாதார ஆய்வாளார்கள், கிராம செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News