செய்திகள்
தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?- தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக 2 நாட்கள் அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சுங்க இலாகா அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
* வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
* வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பாக தகவல்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும்.
* தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும்.
* தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும்.
* ஆர்.கே.நகர், வேலூர் இடைத்தேர்தல் போன்று சட்டசபை தேர்தல் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக 2 நாட்கள் அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சுங்க இலாகா அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
* வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
* வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பாக தகவல்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும்.
* தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும்.
* தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும்.
* ஆர்.கே.நகர், வேலூர் இடைத்தேர்தல் போன்று சட்டசபை தேர்தல் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.