செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?- தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

Published On 2021-02-11 08:55 GMT   |   Update On 2021-02-11 08:55 GMT
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக 2 நாட்கள் அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சுங்க இலாகா அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

* வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பாக தகவல்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும்.

* தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும்.

* தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும்.

* ஆர்.கே.நகர், வேலூர் இடைத்தேர்தல் போன்று சட்டசபை தேர்தல் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News