செய்திகள்
கைது

ஆற்காடு பகுதியில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

Published On 2021-07-16 12:00 GMT   |   Update On 2021-07-16 12:00 GMT
ஆற்காடு பகுதியில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு தண்டுபஜார் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 23), தோப்புகானா தியாகி சண்முகம் தெருவைச் சேர்ந்த சபரீசன் (24), குட்டைக்கார தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (25), முப்பது வெட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (21) ஆகியோர் ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News