செய்திகள்
மணிகா பத்ரா

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்- மூன்றாம் சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

Published On 2021-07-25 09:54 GMT   |   Update On 2021-07-25 09:54 GMT
துவக்கத்தில் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் வீராங்கனை முதல் இரண்டு செட்களை எளிதாக கைப்பற்றினார்.
டோக்கியோ:

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா, 4-3 என்ற செட்கணக்கில் உக்ரைன் வீராங்கனை பெசோட்ஸ்காவை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

துவக்கத்தில் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் வீராங்கனை முதல் இரண்டு செட்களை எளிதாக கைப்பற்றினார். அதன்பின்னர் எழுச்சி பெற்ற மணிகா பத்ரா அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி சமன் செய்தார். 5வது செட்டை பெசோட்ஸ்கா வசமாக்கினார். அடுத்த 2 செட்களை மணிகா பத்ரா கைப்பற்றியதால் வெற்றி பெற்றார்.

முன்னதாக ஆண்களுக்கான ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சத்யன், 3-4 என போராடி தோல்வி அடைந்தார்
Tags:    

Similar News