செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது

Published On 2021-07-20 12:53 GMT   |   Update On 2021-07-20 12:53 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடியதாக வெப்பாலம்பட்டி மகேந்திரன் (வயது 43), மோகன் (24), ரங்கநாதன் (30), வெற்றிவேல் (37), சேவகானப்பள்ளி முனிராஜ் (25), முத்துராயன்தொட்டி பாலாஜி (23), மாதப்பன் (25), சீனிவாஸ் (35), சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கதிரிப்பட்டி வீரமுத்து (30), பெரிய பேட்டிகானப்பள்ளி முருகன் (42), பேட்டிகானப்பள்ளி சிவா (23), சோனரஹள்ளி சரவணன் (31), பெரியசாமி (42), பூங்காவனம் (53), சக்தி (45) ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1,600 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News