செய்திகள்
போதை பொருள்

மும்பை துறைமுகத்தில் ரூ.125 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

Published On 2021-10-08 08:33 GMT   |   Update On 2021-10-08 08:33 GMT
மும்பையில் உள்ள நஹவஷேவா துறைமுகத்தில் ரூ.125 கோடி மதிப்புள்ள போதை பொருளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மும்பை:

மும்பையில் உள்ள நஹவஷேவா துறைமுகத்தில் வருவாய் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்கு உள்ள கண்டெய்னரில் 25 கிலோ ஹெராயின் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மதிப்பு ரூ.125 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags:    

Similar News