செய்திகள்
கொள்ளை

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

Published On 2020-11-20 09:14 GMT   |   Update On 2020-11-20 09:14 GMT
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பைபாஸ் சாலையில் இரும்பு கடை நடத்தி வருபவர் பாத்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (43). நேற்று காலை வழக்கம் போல கடையை திறக்க சென்ற அவர், கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பித்தளை, தாமிர மற்றும் இரும்பு வால்வுகளை திருடிச் சென்றது தெரியவந்து.

மேலும் கடந்த ஒரு மாத காலமாகவே கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் தொடர்ந்து இரும்பு கடைகளின் பூட்டை உடைத்து இத்தகைய திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது அந்த பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு கடையின் பூட்டை உடைத்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News