செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவில் வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை - நாளை நடக்கிறது

Published On 2021-10-27 06:59 GMT   |   Update On 2021-10-27 06:59 GMT
பேச்சுவார்த்தையில் 8 விசைத்தறி உரிமையாளர்கள் சங்க உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் சுற்றுப்பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 40 ஆயிரம் பேர் பயன் பெறுகின்றனர்.

தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை3 மணிக்கு பயணியர் விடுதியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையிலும், கலெக்டர் வினீத் முன்னிலையிலும் நடக்கிறது. இதில் 8 விசைத்தறி உரிமையாளர்கள் சங்க உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
Tags:    

Similar News