உள்ளூர் செய்திகள்
திசையன்விளை கால்டுவெல் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
பிறந்தநாளையொட்டி திசையன்விளை கால்டுவெல் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திசையன்விளை:
தமிழ் அறிஞர் பிஷப் கால்டுவெல் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று அவரது 208-வது பிறந்தநாளையொட்டி திசையன்விளை அருகே இடையன்குடியில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள கால்டுவெல் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிந்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் அருள் ஜெயபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.