செய்திகள்
பாத்திர வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
பாபநாசத்தில் பாத்திர வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் மேலகஞ்சி மேடு பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது55). இவர் பாபநாசம் மெயின்ரோட்டில் பாத்திரக்கடை வைத்துள்ளார். நேற்று மாலை வீட்டைப்பூட்டி விட்டு மனைவியுடன் வேலு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ள சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் மேலகஞ்சி மேடு பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது55). இவர் பாபநாசம் மெயின்ரோட்டில் பாத்திரக்கடை வைத்துள்ளார். நேற்று மாலை வீட்டைப்பூட்டி விட்டு மனைவியுடன் வேலு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ள சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.