ஆன்மிகம்
அனுமந்தராயசுவாமி கோவிலில் காய்கறி அலங்காரத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர்

அனுமந்தராயசுவாமி கோவிலில் காய்கறி அலங்காரத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர்

Published On 2021-02-15 02:45 GMT   |   Update On 2021-02-15 02:45 GMT
காரமடை அருகே மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் மூலவர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு 36 வகையான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
காரமடை அருகே மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழித்து மக்களின் வாழ்வு ஏற்றம் பெற வேண்டி ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு 36 வகையான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

மூலவர் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News