ஆன்மிகம்
அனுமன் வாகனத்தில் கோதண்டராமர்

பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: அனுமன் வாகனத்தில் கோதண்டராமர்

Published On 2021-03-19 03:40 GMT   |   Update On 2021-03-19 03:40 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் ஆறாவது நாளில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அனுமன் வாகனச்சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வசந்த உற்சவம் மற்றும் ஆஸ்தானம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை யானை வாகன சேவை ஆகியவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவில் பெரியஜீயர்சுவாமிகள், சின்னஜியர்சுவாமிகள் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News