ஆன்மிகம்
அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுசின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.

ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயத்தில் அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் நினைவு திருப்பலி

Published On 2021-09-15 04:39 GMT   |   Update On 2021-09-15 04:39 GMT
ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயத்தில் அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் 100-வது நாள் நினைவு திருப்பலி நடந்தது. இதில் 5 ஆயர்கள் கலந்து கொண்டனர்.
அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் -ன் 100-வது நாள் நினைவு திருப்பலி அவரது சொந்த ஊரான ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயத்தில் நடந்தது. அருட்பணியாளரின் மருமகனும் மீரட் மறைமாவட்ட ஆயருமான பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார். கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் முன்னுரை வழங்கினார். சிவகங்கை முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம் மறையுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியையொட்டி அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் “மனநல ஆற்றுப்படுத்துதல் கையேடு” என்ற நூலை படைத்து அருட்பணியாளருக்கு அர்ப்பணமாக்கினார்.

கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அருட்பணியாளர் எல்பின்ஸ்டன் ஜோசப் நிறைவுரை ஆற்றினார்.

இதில் அகமதபாத் ஆயர் ரெத்தினசுவாமி, மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மா பாவுலோஸ், பாளையங்கோட்டை ஆயர் அந்தோணிசாமி, முன்னாள் ஆயர் ஜீடு பால்ராஜ் ஆகியோர் பங்கேற்று ஜெபித்தனர்.

நிகழ்ச்சியில், அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் நிறுவிய வௌ்ளமடம் அகத்தியர் முனி குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் தலைவர் அருட்பணியாளர் லியோண் கென்சன், மேலாண்மை இயக்குனர் பேட்ரிக் சேவியர், மருத்துவமனை பணியாளர்கள், கோட்டார் மற்றும் குழித்துறை மறை மாவட்டங்களில் இருந்து அருட்பணியாளர்கள், பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற பிற மறைமாவட்டங்களை சேர்ந்த அருட்பணியாளர்கள், ஆலஞ்சி பங்குத்தந்தை. மரிய சூசை வின்சென்ட், பங்குப்பேரவையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பலியை தொடர்ந்து அருட்பணியாளரின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளரின் தம்பி ஜோசப் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News