செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் சிஆர்பிஎப் வீரர் பலி

Published On 2019-04-05 05:11 GMT   |   Update On 2019-04-05 05:11 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி பகுதியில் நக்சல்களுடன் நடைபெற்ற சண்டையில் சிஆர்பிஎப் வீரர் பலியானார். 2 வீரர்கள் படுகாயமுற்றனர். #ChhattisgarhEncounter
ராய்ப்பூர்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்திற்கு உட்பட்ட சலிகாட் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் நக்சல்கள் தாக்கியதில்  சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சண்டையில் நக்சல்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ChhattisgarhEncounter   
Tags:    

Similar News