செய்திகள்
கோப்புபடம்

மோகனூர் அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை

Published On 2020-11-21 06:57 GMT   |   Update On 2020-11-21 06:57 GMT
மோகனூர் அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள அரசநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காட்டூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 1 ஆண்டுக்கு முன்பு மது குடிப்பதை நிறுத்தி விட்டார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அவர் வாந்தி எடுத்தார். அப்போது அவரது மனைவி ஏன் வாந்தி எடுக்கிறீர்கள்? என்று கேட்டபோது, உடல் நலம் சரியில்லை என கூறிவிட்டு அறையில் படுத்து கொள்வதாக கூறி சென்றார். மறுநாள்காலையில் எழுந்து பார்த்தபோது அவர் வீட்டில் இல்லை. 

பிறகு தேடிய போது கிணற்றில் உடல் மிதந்தது தெரியவந்தது. இதுபற்றி மோகனூர் போலீசில் அவரது மகன் பிரகாஷ் (33) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கிணற்றில் மிதந்த உடலை நாமக்கல் தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுப்பிரமணி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News