ஆன்மிகம்
உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2021-01-30 06:13 GMT   |   Update On 2021-01-30 06:13 GMT
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தை மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டியும், உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.

முன்னதாக சமயபுரத்து மாரியம்மனுக்கு பால், இளநீர், தேன், திரவியம், திருநீறு, தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News