வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Published On 2022-03-28 06:54 GMT   |   Update On 2022-03-28 06:54 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராகு-கேது பூஜை நடக்கும் மண்டபங்கள் பக்தர்களால் நிரம்பியிருந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராகு-கேது பூஜை நடக்கும் மண்டபங்கள் பக்தர்களால் நிரம்பியிருந்தது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். அதேபோல் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராகு-கேது பூஜை நடக்கும் மண்டபங்கள் பக்தர்களால் நிரம்பியிருந்தது.

கோவில் உள்ளே பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த மின் விசிறிகள் பழுதடைந்ததால் கடும் வெயிலால் பக்தர்கள் அவதிப்பட்டனர். எனினும், வரிசைகளில் காத்திருந்த பக்தர்களுக்கு கோவில் ஊழியர்கள் குடிநீர் வழங்கியதால் நிம்மதியடைந்தனர். நேற்று மாலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ராகு காலம் என்பதால் அந்த நேரத்தில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்று பூஜை செய்தனர்.
Tags:    

Similar News