செய்திகள்
நகை பறிப்பு

வாலாஜா அருகே பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

Published On 2021-09-18 09:57 GMT   |   Update On 2021-09-18 09:57 GMT
வாலாஜா அருகே பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் பாமா (வயது 45). இவர் தனது வீட்டின் முன்பு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த நபர்கள், பாமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின், ஒரு பவுன் கோதுமை செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News