செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் 695 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2020-10-27 12:55 GMT   |   Update On 2020-10-27 12:55 GMT
தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 522 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 029 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 5
செங்கல்பட்டு - 144
சென்னை - 695
கோவை - 209
கடலூர் - 45
தர்மபுரி - 25
திண்டுக்கல் - 2
ஈரோடு - 76
கள்ளக்குறிச்சி - 22
காஞ்சிபுரம் - 98
கன்னியாகுமரி - 48
கரூர் - 25
கிருஷ்ணகிரி - 25
மதுரை - 57
நாகை - 35
நாமக்கல் - 68
நீலகிரி - 81
பெரம்பலூர் - 3
புதுக்கோட்டை - 25
ராமநாதபுரம் - 3
ராணிப்பேட்டை - 20
சேலம் - 146
சிவகங்கை - 19
தென்காசி - 5
தஞ்சாவூர் - 61
தேனி - 19
திருப்பத்தூர் - 38
திருவள்ளூர் - 115
திருவண்ணாமலை - 23
திருவாரூர் - 40
தூத்துக்குடி - 39
திருநெல்வேலி - 28
திருப்பூர் - 99
திருச்சி - 42
வேலூர் - 68
விழுப்புரம் - 39
விருதுநகர் - 27

மொத்தம் - 2,522
Tags:    

Similar News