செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்

Published On 2020-10-27 07:06 GMT   |   Update On 2020-10-27 07:06 GMT
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை கேள்விப்பட்டதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைத்தார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை செயலகத்தில் இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன. தமிழகத்தின் பல பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை காணொலி வாயிலாக அவர் திறந்து வைக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக இருப்பதை கேள்விப்பட்டதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டார்.
Tags:    

Similar News