விருதுநகர் அருகே வீட்டில் இருந்த நகை-பணம் திருட்டு
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைத்தாய் (வயது 68), தனியாக வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே 8 வருடங்களுக்கு முன்பு மாரியம்மாள் என்பவர் வசித்தார். தற்போது அவர் வெளியூரில் உள்ளார்.
சம்பவத்தன்று மாரியம்மாள் இல்ல விசேஷத்திற்கு அழைப்பதற்காக வெள்ளைத்தாய் வீட்டிற்கு வந்தார். அங்கு இரவு தங்கிவிட்டு மறுநாள் மாரியம்மாள் சமைக்க கறி வாங்கி வருகிறேன் என கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வரவில்லை.
இந்த நிலையில் வெள்ளைத்தாயின் வீட்டில் பீரோ கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே இருந்த பையை பார்த்தபோது அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது.
இதுகுறித்து வெள்ளைத் தாய் வச்சக்கார பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் நகை, பணம் திருட்டு தொடர்பாக மாரியம்மாள் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.