செய்திகள்
அம்மன் கோவிலில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த பட்டாபிராம் சாஸ்திரி நகர் காந்தி தெருவில் வசிப்பவர் ஸ்ரீதரன். இவர் 20 ஆண்டுகளாக தனது வீட்டிற்கு அருகிலேயே ஓம் சிவசக்தி கருமாரி அம்மன் கோயில் வைத்து பூஜை செய்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். நேற்று முன்தினம் காலை ஆட்டோவில் கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அவர்கள் சென்ற பிறகு ஸ்ரீதரன் கோயிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது அம்மன் சிலையில் இருந்த 2 சவரன் செயின் திருடப்பட்டது தெரிய வந்தது.