தொழில்நுட்பம்
கோப்புப்படம்

ஐபோன், ஐபேட் வச்சிருக்கீங்களா? உடனே இதை செய்யுங்க

Published On 2021-08-01 04:17 GMT   |   Update On 2021-08-01 04:17 GMT
இந்தியாவில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வைத்திருப்போர் உடனே இப்படி செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பான CERT-In ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சாதனங்களை பயன்படுத்துவோர் உடனடியாக iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 வெர்ஷனை அப்டேட் செய்ய CERT-In கேட்டுக்கொண்டுள்ளது.

இரு புதிய அப்டேட்களும் பெரும் பிழை திருத்தங்களுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ் மற்றும் அதன்பின் வெளியான ஐபோன் மாடல்கள், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th Gen ஐபேட், ஐபேட் மினி 4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


மெமரி கரப்ஷன் பிழையை கொண்டு ஹேக்கர் பயனரின் சாதனத்தை இயக்க முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ்-இன் IOMobileFrameBuffer-இல் இந்த பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை வேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், இந்திய பயனர்கள் உடனடியாக செக்யூரிட்டி பேட்ச் இன்ஸ்டால் செய்ய CERT-In அறிவுறுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News