செய்திகள்
இளம்பெண் மாயம்

தாய் வீட்டிற்கு சென்ற பெண் திடீர் மாயம் - கணவர் போலீசில் புகார்

Published On 2019-11-18 10:16 GMT   |   Update On 2019-11-18 10:16 GMT
ஈரோட்டில் தாய் வீட்டிற்கு சென்ற பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி குமரன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். சலவைத் தொழிலாளி முழுதும் மனைவி பிரியா (வயது 21). இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். பிரியா வீட்டு வேலை செய்து வந்தார். பிரியாவின் தாய் வீடு அவர் குடியிருக்கும் வீடு அருகே உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற பிரியா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பாஸ்கரன் சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மனைவியை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரியாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News