செய்திகள்
கோப்புபடம்

‘சைபர் கிரைம்‘ குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Published On 2021-09-20 05:35 GMT   |   Update On 2021-09-20 05:35 GMT
வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டால், பதற்றப்படாமல் 155260 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
காங்கயம்;

காங்கயம் போலீசார் சார்பில் ‘சைபர் கிரைம்‘ குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு காங்கயம் பஸ் நிலையத்தில் நடந்தது. 

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், ‘சைபர்’ கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்று பேசினர். வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டால், பதற்றப்படாமல் 155260 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். 

உங்கள் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்களின் வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு செய்ய முடியும். பண மோசடி நடந்த 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். 

உங்கள் வங்கி விபரங்களை யாருக்கும் தெரிவிக்க கூடாது என பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News