செய்திகள்
கோப்புபடம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி வாலிபர் கைது

Published On 2020-10-23 13:22 GMT   |   Update On 2020-10-23 13:22 GMT
போத்தனூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர்:

கோவையை அடுத்த சுந்தராபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், நேற்று வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அக்கம், பக்கத்தினர் அவரை பிடித்து குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பட்ட தாரியான அவர், போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த சுதர்சன் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுதர்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News