ஆன்மிகம்
சந்தனமாரியம்மன்

சந்தனமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-08-16 08:04 GMT   |   Update On 2021-08-16 08:04 GMT
சோழவந்தான் சந்தனமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
சோழவந்தான் மந்தைகளம் பூக்குழிபொட்டல் சந்தனமாரியம்மன் கோவிலில் கொரோனா வைரஸ் ஒழிவதற்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி, பால் குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News