ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

அரசக்குழி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-09-16 06:14 GMT   |   Update On 2021-09-16 06:14 GMT
அரசக்குழி முத்துமாரியம்மன் கோவிலில் விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் முத்துமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விருத்தாசலம் அடுத்த அரசக்குழி கிழக்கு தெருவில் செல்வகணபதி, பாலமுருகன், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீபாராதனை நடந்தது.

பின்னர் நேற்று முன்தினம்அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், கலா கர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மூலமந்திர ஹோமம், கோபுர பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள், மூலமந்திர ஹோமம், 8.30 மணிக்கு நாடி சந்தானம், 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து 10 மணிக்கு விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 10.15 மணிக்கு மூலவர் முத்துமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு முத்துமாரியம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News