உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே சூறாவளியுடன் மழை- மின் கம்பி அறுந்ததால் இருளில் தவித்த மக்கள்
புதுப்பேட்டை, அரசூர் சாலையில் போலீஸ் நிலையம் முன்பு இருந்த மரம் ஒன்று சாய்ந்து. இதனால் அருகில் இருந்த மின் கம்பம் உடைந்து விழுந்து மின் ஒயர்கள் அறுந்து தொங்கியது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்றுநள்ளிரவு 12 மணி முதல்சூறை காற்றுடன் திடீர் மழை பெய்தது. இதனால் புதுப்பேட்டை, அரசூர் சாலையில் போலீஸ் நிலையம் முன்பு இருந்த மரம் ஒன்று சாய்ந்து. இதனால் அருகில் இருந்த மின் கம்பம் உடைந்து விழுந்து மின் ஒயர்கள் அறுந்து தொங்கியது.
இதனால் அந்த பகுதியில் இரவு முழுவதும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரி பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்புபணியில் ஈடுபட்டனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,சப்.இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.