செய்திகள்
பாகிஸ்தான் துப்பாக்கி சூடு- இந்திய ராணுவ வீரர் பலி
பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணஹரியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.